யாழ்ப்பாணம் பழைய பூங்காக்கு அண்மித்த பகுதியில் ஏ - 09 வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
லங்கா ஐ.ஓ.சீ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் பெறுவதற்காக மூன்று, நான்கு நாட்களாக காத்திருந்த நிலையில் இன்று குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களுக்கு மட்டும் எரிபொருள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாகனங்கள் வீதியில் மறிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதாக சம்பவ இடத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.