Thursday 28th of March 2024 05:55:09 AM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ் லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வீதியை மறித்து போராட்டம்!

யாழ் லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வீதியை மறித்து போராட்டம்!


யாழ் மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் உள்ள லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிறைவடைந்து விட்டதாக விநியோகத்தை மேற்க் கொண்ட இராணுவத்தினர் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் வீதியை மறித்து இன்று மாலை 6 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக இன்றைய தினம் அத்தியாவசிய சேவையினருக்கும் ஏற்கனவே டோக்கன் விநியோகிக்கப்பட்ட பொதுமக்களுக்குமென இரண்டு வரிசைகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு எரிபொருள் விநியோகம் இன்று காலை முதல் இடம்பெற்றது.

இந்நிலையில் மாலை 5:30 மணியளவில் எரிபொருள் நிறைவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து பொதுமக்களும் அத்தியாவசிய சேவைப்பிரிவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் தாம் மூன்று நாட்களுக்கு மேலாக வரிசையில் காத்திருந்து எரிபொருளை பெறுகின்றோம் எனவும் இன்றும் எரிபொருள் இல்லையென்றால் நாம் என்ன செய்வது?ஒழுங்கான பங்கீட்டை ஆரம்பத்திலேயே மேற்க்கொள்ளாத அரசாங்க அதிபர் பதவி விலகவேண்டும் ?கோ கோம் ஜீ என்றவாறாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ் மாவட்ட பொலிஸ் நிலைய தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்து வீதியின் போக்குவரத்தை சுமூகமான நிலைக்கு கொண்டு வர முயன்றாலும் பொதுமக்கள் குழப்பமான சூழ்நிலையையே எதிர்கொண்டனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE