Friday 29th of March 2024 05:29:22 AM GMT

LANGUAGE - TAMIL
-
இரண்டு வாரங்களில் அலுவலக பஸ் சேவைகளை முன்னெடுக்க திட்டம்; தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்!

இரண்டு வாரங்களில் அலுவலக பஸ் சேவைகளை முன்னெடுக்க திட்டம்; தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்!


எதிர்வரும் இரண்டு வாரங்களில் அலுவலக பஸ் சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் எரிபொருள் பிரச்சினையை அடிப்படையாக கொண்டு பல்வேறு அமைப்புக்கள் விடுத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

தனியார் பஸ்களுக்கு தேவையான எரிபொருள் வழங்கினால், தற்போதைய பஸ் கட்டணத்தை விட குறைந்த விலையில் அலுவலக சேவையை வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போவினால் எரிபொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் அதற்கான பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டிய கெமுனு விஜேரத்ன, போக்குவரத்து சிரமம் காரணமாக பயணிகள் எதிர்நோக்கும் சிரமங்களை அதிகாரிகள் கவனத்தில் கொள்ளாதது வேதனையான நிலை எனவும் குறிப்பிட்டார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE