Friday 19th of April 2024 05:23:38 AM GMT

LANGUAGE - TAMIL
-
சுமந்திரனும் சாணக்கியனும் மக்களை முட்டாளாக்கும் செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றனர்; த.தே.ப.ஒ.நிசாந்தன்!

சுமந்திரனும் சாணக்கியனும் மக்களை முட்டாளாக்கும் செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றனர்; த.தே.ப.ஒ.நிசாந்தன்!


பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கப்போகின்றோம் என்று சொல்லி கிழக்கில் சாணக்கியனும் வடக்கில் சுமந்திரனும் பெரிய போராட்டங்களை செய்து படம் காட்டினார்கள். அதற்கு என்ன நடந்ததென தெரியவில்லை என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிசாந்தன் கேள்வியெழுப்பினார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிசாந்தன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் பிரச்சினைக்காக போராட்டங்களை நாங்கள் முன்னெடுக்கும் போது பெருமளவான மக்கள் இளைஞர்கள் வராமல் இருப்பதற்கு காரணம் பயங்கரவாத தடை சட்டமாகும். பயங்கரவாத தடைச்சட்டம் இல்லாமல் போனால் எமது சிறுவர்கள் கூட களத்தில் நிற்பார்கள்.

2009 எமது போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் 13 வருடங்களாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள். குறைந்தபட்சம் சிறிய விடயங்களைக் கூட செய்யவில்லை.

நல்லாட்சி காலத்தில் ரணில் விக்ரமசிங்கவே பிரதமராக இருந்தார். அந்த காலத்தில் கூட பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க முடியாதவர்கள், அந்த அரசாங்கத்தை இரண்டு மூன்று தடவை முட்டு கொடுத்து தாங்கி இருந்தார்கள்.

தமிழ் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்றத்துக்கு முன்னாலோ காலி முகத்திடலிலோ உண்ணாவிரதம் இருக்க தயாரா? இலங்கையில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு முன்பாக சென்று உண்ணாவிரதம் இருப்பார்களாக இருந்தால் சர்வதேசம் திரண்டு வந்து கரிசனை கொள்ளும்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கப்போகின்றோம் என்று சொல்லி கிழக்கில் சாணக்கியனும் வடக்கில் சுமந்திரனும் பெரிய போராட்டங்களை செய்து படம் காட்டினார்கள். வடக்கு கிழக்கு மலையகம் என அவர்கள் பல இடங்களுக்கும் சென்று கையெழுத்தை சேகரித்தார்கள்.

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க யாரிடம் கோரிக்கை விடப் போகின்றோம் என்பது தொடர்பில் விளக்கமாக செய்யாமல் செயல்பட்டனர்.அதற்கு என்ன நடந்ததென தெரியவில்லை. சர்வதேசத்துக்கு பேக்காட்ட முற்படுகின்றார்கள்.

சுமந்திரனும் சாணக்கியனும் மக்களை முட்டாளாக்கும் செயற்பாடுகளையே முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். படித்த சமூகத்திற்கும் புலம்பெயர் மக்களுக்கும் இது தெரியாமல் அல்ல.

புலம்பெயர்தேசத்திற்கு கடந்த காலங்களில் சென்ற அவருக்கு நடந்த அவமானங்களுக்கு பின்னர் இப்போது ராஜதந்திரத்தை பின்பற்றி தான் போகாமல் அவருடைய பிரதிநிதியாக சாணக்கியனை அனுப்புகின்றார். சாணக்கியன் தமிழ்த் தேசியத்தின் அடியில் இருந்து வந்தவர் அல்ல என்றும் தெரிவித்தார்.

இதன்போது "இனப் படுகொலையாளி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்து" எனும் கோரிக்கையை முன்வைத்து சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் கையளிப்பதற்காக ஆரம்பித்துள்ள கையெழுத்து போராட்டம் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE