அமைச்சு பொறுப்புக்களை ஏற்காது நாட்டை கட்டியெழுப்பும் பொது வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தெரணியகல பகுதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். நாட்டை கட்டியெழுப்புவதற்கான பொது வேலைத்திட்டத்தை பலப்படுத்துவதற்கு தயாராக உள்ளமை தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அறிவிக்கப்பட்டது.
ஜனாதிபதி அதனை வரவேற்றார். அமைச்சு பதவியை பெற்றுக் கொள்ளாது, அதற்காக போட்டியின்றி நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு ஆதரவு வழங்க தயாராக இருக்கிறோம்.
நாடாளுமன்றில் உள்ள 225 உறுப்பினர்களுக்கான தொகையை கூட ஒதுக்க முடியாத நிலையில் நாடு உள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.