யாழ்ப்பாணம் நெல்லியடியில் நடைபெற்ற ஆதிசக்தி விளையாட்டுக் கழகம் நடாத்தும் அணிக்கு 9 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுத்தொடரில் பலாலி விண்மீன் விளையாட்டுக்கழகம் அண்ணாசிலையடி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மோதியது.
இப் போட்டியில் விண்மீன் பிறீமியர் லீக் ஆட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதை சிறப்பாக பயன்படுத்திய வீரர்கள் சிறப்பான முறையில் பந்து பரிமாற்றங்களை மேற்கொண்ட போதும் முதல் பாதியாட்டம் கோல் போடாமல் நிறைவடைந்தது.
இரண்டாவது பாதியாட்டத்தை வேகப்படுத்தியது விண்மீன் அணி.
அதன் பயனாக றெனோ மற்றும் காண்டீபன் தலா ஒவ்வொரு கோல்களை போட 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது பலாலி விண்மீன் அணி
Category: விளையாட்டு, புதிது
Tags: