Wednesday 24th of April 2024 07:52:06 PM GMT

LANGUAGE - TAMIL
-
பல்வேறு திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது!

பல்வேறு திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது!


கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி பகுதியில்தருமபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலிற்மைவாக, குறித்த பகுதியில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 4 பேர் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர்.

வட்டக்கச்சி ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஆலயத்தில் திருப்பணி அபிவிருத்தி வேலைக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு கேடர்கள் ஐந்தை திருடிய குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரும், இராமநாதபுரம் பகுதியில் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான பசு மாட்டினை திருடிய குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே பகுதியில் தண்ணீர் இறைக்கும் நீர் பம்பியை திருடிய குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேக நபரும், வட்டக்கச்சி கல்மடு பகுதியில் நான்கு துவிச்சக்கரவண்டிகளை திருடிய குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் அனைவரும் தர்மபுரம் பொலிசாரின் விசாரணைகளின் பின்னர் தம் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டதற்கிணங்க கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

இதன்பொழுது எதிர்வரும் 18 .08 2022 வரை குறித்த சந்தேகநபர்கள் பல்வேறு திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைதுவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE