பொலிசாரின் அசமந்த போக்கினாலே காரைநகரில் வீடு ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டதாக பிரஜைகள் ஆலோசனை சபை தலைவர் தம்பி தம்பிராசா தெரிவித்தார்.
யாழ் ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், இலங்கைப் பொலிஸாரின் செயற்பாடுகள் கடந்த காலங்களில் இவ்வாறே அசமந்தமாக காணப்பட்டதாக தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இடம் பெற்ற பனை மர கடத்தல் போன்ற பல்வேறு சம்பவங்களில் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்