அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் நாடாளுமன்ற குழுக்களில் இருந்து கொண்டு நாட்டை கட்டியெழுப்ப ஆதரவு வழங்க காத்திருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்தார்.
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியாக இந்நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு தேவையான உதவிகளை வழங்க தீர்மானித்தோம்.
நாடாளுமன்றத்தை பலப்படுத்தி அதனூடாக செயற்படுவேன் என ஜனாதிபதி கொள்கை பிரகடன உரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதனை வன்மையாக கண்டிக்கிறோம். எவ்வாறாயினும், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எமது கட்சி ஆதரவை வழங்குமே தவிர கட்சியிலிருந்து எவரும் செல்லமாட்டார்கள் என்றார்.