கொரோனா தொற்று உறுதியான மேலும் 166 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 668,663ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 5 பேர் மரணித்தனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த மரணங்கள் நேற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது
60 வயதிற்கு மேற்பட்ட நால்வரும், 30 முதல் 59 இடைப்பட்ட ஒருவரும் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்ததாக அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை