Friday 19th of April 2024 08:08:16 PM GMT

LANGUAGE - TAMIL
-
அத்தியாவசிய பொருட்களுக்கான விலை மேலும் அதிகரிக்கக் கூடும் -  நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை

அத்தியாவசிய பொருட்களுக்கான விலை மேலும் அதிகரிக்கக் கூடும் - நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை


அரசாங்கத்தினால் அத்தியாவசிய உள்ளிட்ட ஏனைய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படாவிட்டால் சில பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரித்துள்ளது.

தற்போது அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை மாத்திரமே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக சந்தையில் ஏனைய பொருட்களுக்கான விலைகளை வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் அடிக்கடி அதிகரிப்பதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

பொதி செய்யப்பட்ட உற்பத்தி சார்ந்த பொருட்களின் விலைகள் அண்மைய காலமாக பலத் தடவைகள் அதிகரிக்கப்பட்டன.

அரசாங்கத்தினால் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படாமையே இதற்கான காரணம் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

பிஸ்கட், சவர்க்காரம், சலவை தூள், உடனடி நூடில்ஸ், சோயா உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் தற்போது வெகுவாக அதிகரித்துள்ளன.

அதிக விலைக் காரணமாக சில பொருட்களை நுகர்வோர் கொள்வனவு செய்வதை தவிர்த்து வருகின்றனர்.

இதன் காரணமாக அத்தியாவசிய பொருள் உள்ளிட்ட ஏனைய உற்பத்தி பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என நுகர்வோர் அதிகார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE