Tuesday 23rd of April 2024 04:03:05 PM GMT

LANGUAGE - TAMIL
-
பாக்.அணியை வெற்றி கொண்டது இலங்கை அணி!

பாக்.அணியை வெற்றி கொண்டது இலங்கை அணி!


இன்று நடைபெற்ற ஆசிய கிண்ண தொடரின் சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் அணியை இலங்கை அணி வெற்றி கொண்டது.

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது.

முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 121 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்களையும், மஹீஷ் தீக்ஷன மற்றும் பிரமோத் மதுஷான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 122 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17 ஓவர்கள் நிறைவில் 124 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் பத்தும் நிஷங்க ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE