நேற்று நள்ளிரவு முதல் கதிர்காமம் பிரதேச சபை கலைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முசம்மில்லின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 10ஆம் திகதி தற்காலிகமாக அந்த பிரதேச சபையின் செயற்பாடுகள் கைவிடப்பட்டன. இதனையடுத்து, பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட சபையின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஓய்வுப் பெற்ற நீதிவான் எச்.எம்.ஆர் அநுரகுமாரவின் விசாரணை அறிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய பிரதேச சபை ஸ்தாபிக்கப்படும் வரை அதன் செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதிகாரம் மொனராகலை உதவி உள்ளூராட்சி மன்ற ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.