முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், நவராத்திரி பூஜை சிறப்பு வழிபாடு நேற்றுப் புதன்கிழமை இரவு அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இச்சிறப்பு வழிபாட்டில், இந்திய அமைச்சரவை முன்னாள் அமைச்சரும் இராஜ்யசபாவின் முன்னாள் உறுப்பினருமான கலாநிதி சுப்பிரமணியன் சுவாமி சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார்.