இலங்கை மருத்துவமனைகளுக்கு 300 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை வழங்குவதாக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் (JICA) தெரிவித்துள்ளது.
உயிர்காக்கும் மருந்துகள் இலங்கைக்கு விரைவாக பெற்றுக்கொடுக்கப்படும் என ஜெய்கா (JICA) இலங்கை அலுவலகத்தின் சிரேஷ்ட பிரதிநிதி (அவசர உதவிப் பிரிவு) டெட்சுயா யமடா தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் நெருக்கடி காரணமாக இலங்கை கடுமையான மருந்து பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் இல்லாததால் சில மருத்துவமனைகள் அறுவை சிகிச்சைகளை நிறுத்தி வைக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது என ஜப்பானிய உதவி நிறுவனம் தெரிவித்துள்ளது.