Wednesday 1st of May 2024 05:06:20 PM GMT

LANGUAGE - TAMIL
ஞானசாரதேரர், ஜனாதிபதி சந்திப்பு
ஜனாதிபதியை சந்தித்தார் ஞானசாரதேரர்..

ஜனாதிபதியை சந்தித்தார் ஞானசாரதேரர்..


பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையான ஞானசார தேரர் தன்னுடைய தாயாருடன் சென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

நேற்றிரவு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தனது மகனை விடுதலை செய்ததற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் ஞானசார தேரரின் தாயார்.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்ட பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டார்.

ஜனாதிபதி கையொப்பத்துடன் கூடிய பொது மன்னிப்பு உத்தரவு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜயசிரி தென்னகோனிடம் கையளிக்கப்பட்ட நிலையிலேயே ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு நேற்று மாலை அவர் வெலிக்கடை சிறைச்சாலியில் இருந்து விடுதலை பெற்று சென்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE