உலகக் கோப்பை கிரிக்கட் தொடரில் இருந்து இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காயம் காரணமாக மூன்று வாரங்கள் ஓய்வு எடுக்குறுமாறு மருத்துவர்கள் அறிவித்துள்ள நிலையில் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தவானுக்கு பதிலாக ரிஷப் பந்த் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரில் ஒருவர் அணியில் இணைத்துக்கொள்ளப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி இறுதியாக சந்தித்த போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்த்து ஆடிய போது தவான் சதம் அடித்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்திருந்தார்.
இந்நிலையில் தொடரும் போட்டிகளில் தவான் இடம்பெறாமை குறித்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Category: விளையாட்டு, பகுப்பு
Tags: