முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐயன்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மரக்கடத்தல் நடவடிக்கை இன்று அதிகாலை முறியடிக்கப்பட்டுள்ளது.
ஒலுமடு வனபரிபாலன அலுவலகர் பிரிவுக்கு உட்பட்ட ஐயன்குளம் பகுதியில் முதிரைமரம் கடத்தப்படுவதாக வனபரிபாலசபையினருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது.
சம்பவத்தை அடுத்து அங்கு அவர்கள் சென்றபோது மரக் கடத்தலில் ஈடுபட்டவர்கள் முதிரைமரக் குற்றிகள் ஏற்றப்பட்ட நிலையில் காணப்பட்ட வாகனத்தை கைவிட்டுவிட்டுத் தப்பி ஓடியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட வாகனமும் மரக்குற்றிகளும் நீதிமன்றில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வன பரிபாலன திணைக்களத்தினர் அறிவித்துள்ளனர்.