காணி அபகரிப்பில் ஈடுபட்டதாக தன்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தவறானது என்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார். நேற்று முல்லைத்தீவு பாண்டியன் குளத்தில் ஊடகச்சந்திப்பு ஒன்றினை நடத்திய சாந்தி இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.
தன்மீதான குற்றச்சாட்டுத் தவறானது என்றும் குற்றச்சாட்டை முன்வைத்த சக நாடாளுமன்ற உறுப்பினர் மீது தமது கட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
குறித்த சந்திப்பில் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் தனிநாயகம் மற்றும் கிராம அபிவிருத்திச்சங்கத்தினர் கமக்காரர் அமைப்பினர் உள்ளிட்டவர்களும் கருத்து வெளியிட்டனர்.