Friday 26th of April 2024 06:46:58 AM GMT

LANGUAGE - TAMIL
மன்னார் எழுத்தூர் குளத்தை ஆழப்படுத்தும் பணிகள் தீவிரம்!

மன்னார் எழுத்தூர் குளத்தை ஆழப்படுத்தும் பணிகள் தீவிரம்!


மன்னார் நகரின் எழுத்தூர் குளத்தை ஆழப்படுத்த மன்னார் நகர சபை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் குளங்கள் பல நீரின்றி வறண்டு கிடக்கின்றன.

மக்களின் பாவனைக்குரிய எழுத்தூர் குளமும் வறண்டு கிடக்கிறது. இந்நிலையில் மாரி காலம் ஆரம்பிப்பதால், கடும் வறட்சியையும் எதிர்கொள்ளும் நோக்கில் ஆழப்படுத்தப்படுகின்றது.

மன்னார் நகர சபையின் தலைவர் எஸ். ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனின் பணிப்புரைக்கு அமைவாக நகர சபை உறுப்பினர் மனோ ஐங்கர சர்மாவின் தலைமையில் குறித்த குளம் அகலப்படுத்தப்பட்டு ஆழப்படுத்தப்படும் வருகின்றது.

குறித்த குளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளப்படும் மண் மன்னார் நகர சபைக்குற்பட்ட சேதமடைந்த வீதிகளின் புனரமைப்புப் பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE