Wednesday 1st of May 2024 05:39:27 PM GMT

LANGUAGE - TAMIL
இந்தியாவுடன் பேச  ஒன்றுமில்லை - இம்ரான்

இந்தியாவுடன் பேச ஒன்றுமில்லை - இம்ரான்


இந்தியாவுடன் பேச இனி ஒன்றுமில்லை என்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்ட பிரிவை இந்திய மத்திய அரசு இரத்து செய்தது. மேலும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது. காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயன்றது.

ஆனால் பயங்கரவாதத்துக்கு ஆதரவான நடவடிக்கையை கைவிவிட்டால் மட்டுமே பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சு நடத்த முடியும் என்று இந்தியா மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தது. இதற்குப் பதிலளித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தியா தொடர்ந்து குறை கூறி வருகிறது. இந்தியாவில் இருப்பவர்களை சமாதானப்படுத்தவே அவ்வாறு கூறுவதாக எண்ணத் தோன்றுகிறது. எனவே, இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை எனவும் இம்ரான் கான் கூறியுள்ளார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE