பல்லாயிரக்கணக்கான பக்தர்களை பரவசப்படுத்தி கைலாய வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார் கந்தப்பெருமான்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஈழத்தின் நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திவிழா கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இருபதாம் திருவிழாவான இன்று ஞாயிற்றுக்கிழமை கைலாயவாகனத் திருக்காட்சி இடம்பெற்றது. வள்ளி, தெய்வானை சமேதராக முருகப்பெருமான் கைலாய வாகனத்தில் எழுந்தருளினார்.