வவுனியா மாவட்டத்தில் அதிகரித்து வரும் இளவது திருமணத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் வவுனியா மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு கருத்தமர்வொன்று இன்று இடம் பெற்றது.
இள வயதுத் திருமணத்தின் தாக்கம் அதிகம் காணப்படும் காத்தார் சின்னக்குளம் கிராமசேவகர் பிரிவுக்குற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த கருத்தமர்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட சிறுவர்மேம்பாட்டு அதிகாரி யே.கெனடி , தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட பொறுப்பதிகாரி செல்வகுமார் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு, இளவயதுத் திருமணத்தினால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புக்கள், சமூக சீர்கேடுகள் தொடர்பிலான கருத்துரைகளை வழங்கினர்.