அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று காலை 8 மணிமுதல் நாடளாவிய ரீதியில் 24 மணித்தியால பணி பகிஸ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.
அதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவிலும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பள பிரச்சினை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த பணிபகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கபட்டுள்ளது.
இதன் காரணமாக வவுனியாமாவட்ட பொது வைத்திய சாலைக்கு சிகிச்சைக்காக வருகைதந்த நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இதேவேளை நோயாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அவசர சிகிச்சைபிரிவு, சிறுநீரக, சிறுவர் மற்றும் மகப்பேற்று பிரிவுகள் வழமை போல இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.