கனடாவின் - பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தின் வடக்கு நெடுஞ்சாலையில்; இரண்டு கரடிகள் சண்டையிடும் அரிதாகக் காணக்கூடிய காட்சியை பெண்ணொருவர் தனது கமெராவில் பதிவு செய்து தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
வெள்ளிக்கிழமை அவர் பதிவு செய்த இக்காட்சி சமூக வலைத்தளங்களில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
இன்றுவரை இந்தக் காட்சியை சுமார் 150,000 பேர் பார்வையிட்டுள்ளனர். 43 ஆயிரம் பேர் அதனைத் தமது பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
கேரி மெக்கிலிவ்ரே என்ற பெண் வெள்ளிக்கிழமை பிற்பகல் பேஸ்புக்கில் இந்த வீடியோவை வெளியிட்டார்.
இரண்டு கிரிஸ்லைஸ் கரடிகள் சண்டையிடும் இந்த நம்பமுடியாத அரிதான மற்றும் ஆச்சரியமான தருணத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன் என தனது பகிர்வில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மெக்கிலிவ்ரே தனது ஆரம்ப இடுகையில் இந்த வீடியோ எங்கே? எப்போது? எடுக்கப்பட்டது என்பதைக் குறிப்பிடவில்லை. ஆனால் ஸ்டீவர்ட் மற்றும் மெஜியாடின் சந்திக்கு இடையிலான ஸ்டீவர்ட் காசியார் நெடுஞ்சாலையில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கருத்துப் பக்கத்தில் பின்னர் எழுதியுள்ளார்.
ஸ்டீவர்ட் என்பது அலாஸ்கா எல்லைக்கு அருகில் சுமார் 500 பேர் வசிக்கும் நகரம்.
இந்தப் பகுதியில் இரண்டு கரடிகள் ஒன்றையொன்று கூச்சலிட்டு கர்ஜிக்கும்போது அதனை மெக்கிலிவ்ரே வீடியோ எடுக்கத் தொடங்கினார். இரு கரடிகளும் தங்கள் பின்னங்கால்களில் எழுந்து சாலையோரம் நகர்கிறன. அவை நகரும்போது சண்டையிடுகின்றன.
தூரத்தில் இருந்து ஒரு ஓநாய் இந்தக் சண்டையைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
கரடிகளில் ஒன்று மற்றொன்றை கமரா இருந்த பகுதியை நோக்கி துரத்துகிறது. அத்துடன் அந்தக் காட்சி முடிவடைகிறது.