நீதிமன்ற உத்தரவையும் மீறி சர்ச்சைக்குரிய புத்த பிக்குவின் சடலம் முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் குளத்தின் நடுப்பகுதியில் எரியூட்டப்பட்டுள்ளது.
குறித்த பிக்குவின் சடலத்தை அந்தப் பகுதியில் எரியூட்டவோ புதைக்கவோ வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி சடலம் எரியூட்டப்பட்டுள்ளது.
இதனிடையே குறித்த சடலத்தை அந்தப் பகுதியில் எரிப்பதற்கு தமிழ்மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்க முற்பட்டபோது அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன் சடலத்தை எரிப்பதற்கு தடை ஏற்படுத்தவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்ற உத்தரவை பொலிஸாரே உதாசீனப்படுத்தியிருப்பதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.