Friday 26th of April 2024 07:16:39 PM GMT

LANGUAGE - TAMIL
கல்கேரியில் துப்பாக்கிச் சூடு!

கல்கேரியில் துப்பாக்கிச் சூடு!


கனடா - கல்கேரி நகரத்தில் இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பை நோக்கி வேகமாக நகர்ந்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அதில் இருந்த இருவர் காயமடைந்தனர்.

சனிக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை அடுத்து கல்கேரி நகரத்தின் சில பகுதிகள் மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 22 வயது இளைஞன் மற்றும் 28 வயதான பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்கேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் இல்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கல்கேரி நகரில் இராணுவ அணி வகுப்பு நடந்துகொண்டிருந்தபோது சந்தேகத்துக்கு இடமான கார் அணிவகுப்பை நோக்கி வேகமாக நகர்ந்தது.

இதனையடுத்து பொலிஸார் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்றனர். எனினும் அந்த வானத்தில் இருந்தவர்கள் நிறுத்தாமல் தப்பியோடினர். அவர்களை விரட்டிச் சென்ற பொலிஸார் வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதனையடுத்து அந்த வாகனம் விபத்துக்குள்ளாகி நின்றது. வாகனத்தை சுற்றவளைத்த பொலிஸார் அதிலிருந்த இருவரையும் கைது செய்தனர். துப்பாக்கி குண்டு பட்டு காயமடைந்த அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை, இவர்கள் இருவரும் பயணம் செய்த கார் பிறிதொரு சம்பத்தில் திருடப்பட்டது எனவும் பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

இதேவேளை, இராணுவ அணிவகுப்பை நோக்கி இந்தக் கார் வேகமாக நகர்ந்தமைக்கான காரணம் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து இராணுவ அணிவகுப்பு நிறுத்தப்பட்டது.

இந்தச் சம்பவத்துடன் தீவிரவாதிகளுக்கு தொடர்புள்ளதா? என்ற சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது.


Category: உலகம், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE