நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு பயன்படுத்துவதற்காக வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படக் காத்திருந்த வாகனத்தில் போலி வாக்குச் சீட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அம்பாந்தோட்டையில் இடம்பெற்றிருப்பதாக தெரியவருகிறது.
இந்தத் தகவல் பொலிஸாரை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ளது.
நாளை சனிக்கிழமை ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பும் பணிகள் இன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதன்போது அம்பாந்தோட்டையில் வாக்குப் பெட்டியை ஏற்றிச் செல்லும் ஹைஏஸ் வானில் போலி வாக்குச்சீட்டுகள் கைப்பற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.