Thursday 2nd of May 2024 12:29:38 PM GMT

LANGUAGE - TAMIL
அங்கயன், வியாழேந்திரனுக்கு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைமையே கிட்டியது!

அங்கயன், வியாழேந்திரனுக்கு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைமையே கிட்டியது!


அங்கஜன் இராமநாதன்,எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்டோருக்கு மாவட்ட இணைப்புக் குழு தலைவர் பதவிகளே வழங்கப்பட்டுள்ளன.

நேற்று இடம்பெற்ற மாவட்ட இணைப்புக் குழுக்களுக்கான புதிய தலைவர்கள் நியமனத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான முத்து சிவலிங்கம், காதர் மஸ்தான், அங்கஜன் இராமநாதன், எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்டோரும், மாவட்ட இணைப்புக் குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட மட்டத்தில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் தேசிய அபிவிருத்தித் திட்டங்களுடன் இணைந்து ஒருங்கிணைத்தல், அமுல்படுத்தல் மற்றும் கண்காணித்தல் ஆகிய பணிகள், இந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பணிகளாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாவட்ட இணைப்புக் குழுக்களுக்கான புதிய தலைவர்கள் விபரம் பின்வருமாறு:

கொழும்பு மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுத் தலைவராக விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

திருமதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கம்பஹா மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவியானார்.

களுத்துறை மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக பியெல் நிஷாந்தவும், கண்டி மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக சரத் அமுனுகமவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தளை மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழுவின் தலைவராக லக்ஷ்மன் வசந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக முத்து சிவலிங்கமும்.

காலி மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக சந்திம வீரக்கொடியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறை மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவர் நிரோஷன் பிரேமரத்ன ஆவார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தி இணைப்புக்குழு தலைவராக அங்கஜன் இராமநாதனும், மன்னார் மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக காதர் மஸ்தானும், மட்டக்களப்பு மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக எஸ்.வியாழேந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்ட இணைப்புக்குழு தலைவர் திருமதி ஸ்ரீயாணி விஜேவிக்ரம ஆவார்.

அனுராதபுர மாவட்ட இணைப்புக்குழு தலைவராக வீரகுமார திசாநாயக்கவும், பதுளை மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக தேனுக விதானகமகேயும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கேகாலை மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக சாரதி துஷ்மன்னவும், இரத்தினபுரி மாவட்ட இணைப்புக்குழு தலைவராக துனேஷ் கங்கந்தவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE