அமெரிக்கா மற்றும் தலிபான்களுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவர்த்தை மூன்று மாதங்களின் பின் நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
கட்டார் தலைநகர் டோகாவில் நேற்று ஆரம்பமான பேச்சுவார்த்தையில் அமெரிக்க தூதர் கலில்ஜத் மற்றும் தலிபான் உயர்மட்டக் குழுவினர் பங்கேற்றனர்.
கடந்த 18 ஆண்டுகளாக நடைபெறும் ஆப்கான் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்கான முயற்சிகள் கட்டார் தலைநகர் டோகாவில் நடந்து கொண்டிருந்தபோதே, ஆப்கானில் கடந்த செப்டம்பரில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் அமெரிக்க வீரர் பலியானார். இதையடுத்து இந்த பேச்சுவார்த்தையில் தடை ஏற்பட்டது.
இந்நிலையில் டோகாவில் தலிபான்களுடன் அமெரிக்கா நேற்று மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.