சட்டவிரோத மண்ணகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சியில் இயக்கச்சி சந்தியில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக மண்ணகழ்வு இடம்பெற்று வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த கோரி அப்பகுதி மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
குறித்த பிரதேசம் ஆனையிறவு நீரேரி மற்றும் சுண்டிக்குளம் பகுதிக்கு அண்மையில் காணப்படுவதனால் உவர் நீர் உட்புகும் சாத்தியம் காணப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
அண்மை நாட்களாக அதிகளவான மணல் குறித்த பகுதியிலிருநு்து அழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவு்ம, அவற்றை முழுமையாக கட்டுப்படுத்தி தமது பிரதேசத்தின் இயற்கை வளத்தினை பாதுகாக்கமாறு அவர்கள் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கட்டுப்படுத்தும் அதிகாரத்தை வழங்குமாறு தெரிவித்தும், பிரதேசத்தின் வழங்களை சூறையாடாதே என தெரிவித்தும் பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் ஏ9 வீதியினை மறித்து சில மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பளை பொலிசார் போட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து குறித்த பகுதியில் பொலிஸ் சோதனை நிலையம் ஒன்றை அமைத்து, சட்ட விரோத மண்ணகழ்வினை கட்டுப்படுத்துவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.