Friday 26th of April 2024 10:18:33 AM GMT

LANGUAGE - TAMIL
வெள்ளை வான் நாடகம் விரைவில் அம்பலமாகும்!

வெள்ளை வான் நாடகம் விரைவில் அம்பலமாகும்!


வெள்ளை வான் நாடகங்கள் அனைத்தும் விரைவில் அம்பலமாகும் என்று இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

"முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதித் தேர்தல் காலத்தின்போது மிகவும் சர்ச்சைக்குரிய விடயங்களைக் கூறியிருந்தார். வெள்ளை வான் சாரதிகள் என இருவரை அழைத்துவந்து செய்தியாளர் சந்திப்பொன்றையும் நடத்தியிருந்தார். இந்தச் செயற்பாடானது தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை விமர்சிக்கும் வகையில்தான் அமைந்திருந்தது.

இன்று வெள்ளை வான் சாரதிகள் எனக் கூறிய இருவரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

இதன் பின்னர் பல உண்மைகள் வெளிவரும் என நாம் நம்புகின்றோம். இவர்கள் பொய்யானவர்கள் என அனைவரும் அறிவார்கள். இவர்களின் நாடகம் விரைவில் நாட்டு மக்களுக்கு அம்பலமாகும் என நாம் உறுதியுடன் கூறிக்கொள்கின்றோம்" - என்றார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE