Friday 26th of April 2024 04:47:23 PM GMT

LANGUAGE - TAMIL
முல்லைத்தீவிலிருந்து கிளிநொச்சிக்கு திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மாற்றலாகிறார்?!

முல்லைத்தீவிலிருந்து கிளிநொச்சிக்கு திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மாற்றலாகிறார்?!


கிளிநொச்சி மாவட்டச் செயலாளராக ரூபவதி கேதீஸ்வரன் மீண்டும் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிளிநொச்சி மாவட்டச் செயலாளராக கடமையாற்றிய சுந்தரம் அருமைநாயகம் அமைச்சர் கெஹெலியவின் அமைச்சின் செயலாளராக பதவி மாற்றம் பெற்று சென்ற நிலையில் கிளிநொச்சி மாவட்டச் செயலர் பதவி வெற்றிடமாகக் காணப்பட்டுவந்திருந்தது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளராக கடமையாற்றிவருகின்ற திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கிளிநொச்சி மாவட்டச் செயலாளராக கடைமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டச் செயலாளராக பதவி ஏற்பதற்கு முன்னர் ரூபவதி கிளிநொச்சி மாவட்டச்செயலராக கடமையாற்றியிருந்தார்.

இதனிடையே முல்லைத்தீவு மாவட்டச் செயலாளராக அமைச்சு ஒன்றின் செயலராக கடமையாற்றியிருந்த செந்தில் நந்தனன் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE