Thursday 16th of May 2024 11:39:58 AM GMT

LANGUAGE - TAMIL
அரசுக்கும் தமிழ் மக்களுக்குமிடையே பாலமாகச் செயற்படுவாராம் கருணா!

அரசுக்கும் தமிழ் மக்களுக்குமிடையே பாலமாகச் செயற்படுவாராம் கருணா!


தமிழ் மக்களுக்கும் அரசாங்கத்திற்குமிடையே பாலமாக செயற்படப்போவதாக முன்னாள் பிரதி அமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று தமது கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ச்து கருத்துத் தெரிவித்த அவர்,

வடக்கு, கிழக்கு மக்களுக்காக நான் யுத்தத்திற்கு செல்லவில்லை, தலைநகரில் வாழும் மக்களுக்காகவே யுத்தத்திற்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.

1983ம் ஆண்டுகாலப்பகுதியில் வடக்கு கிழக்கில் யுத்தம் இடம்பெறவில்லை எனவும் கொழும்பில் வன்செயலினால் பாதிக்கப்பட்டு வந்த மக்களை பார்த்தவுடன் தான் அம்மக்களுக்காக போராட்டத்திற்கு சென்றதாவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE