நடிகர் ரஜினிகாந் தனது அரசியல் கட்சியின் முதலாவது மாநாட்டை மதுரையில் நடத்த இருப்பதாகவும் அதற்கு கருணாநிதியின் மகனான மு.க.அழகிரி முழுமையான ஆதரவு வழங்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
மு.க.அழகிரி திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் பல்வேறு அரசயில் தரப்புகள் அவரை அனுகியிருந்தன. எனினும் அவர் ரஜினிக்கு ஆதரவு வழங்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளமை திமுக வட்டாரத்தை கடந்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருணாநிதி உயிருடன் இருந்த காலத்திலேயே அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே முட்டல் மோதல்கள் இருந்து வந்த நிலையில் கருணாநிதி உயிரிழந்த பிற்பாடு விரிசல் அதிகமாகியிருந்தது.
அழகிரியை சமாதானப்படுத்தும் முயற்சிக்ளை காட்டிலும் அவர் வேறு தரப்புடன் இணைந்துவிடக் கூடாதென்பதில் அதிக அக்கறை காட்டப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் தான் தன்னை நிராகரித்த திமுக விற்கு பாடம் புகட்டுவதற்காக ரஜினியுடன் அழகிரி கூட்டுச் சேர்துள்ளதாக அறியமுடிகிறது.