Friday 26th of April 2024 07:24:23 AM GMT

LANGUAGE - TAMIL
பிரான்ஸில் கடலில் விழுந்த விமானத்தில் பயணித்த நால்வரின் கதி என்ன?!

பிரான்ஸில் கடலில் விழுந்த விமானத்தில் பயணித்த நால்வரின் கதி என்ன?!


பிரான்ஸ் - டொமினிகா தீவுக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை ஒரு சிறிய விமானம் கடலில் விழுந்து மூழ்கியதில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட நால்வர் காணாமல் போயுள்ளனர்.

டொமினிகாவில் உள்ள சார்லஸ் டக்ளஸ் விமான நிலையத்தில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் விழுந்து கடலில் மூழ்கியுள்ளது.

இந்த விமானத்தில் இருந்த கணவன், மனைவி, அவர்களது 15 வயது மகன் மற்றும் விமானி ஆகிய நால்வரும் காணாமல் போயுள்ளனனர். இவர்கள் அனைவரும் பிரெஞ்சு குடிமக்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேடல் குழு விமானத்தில் இருந்த ஒருவரின் பாஸ்போர்ட்டுடன் ஒரு கைப்பையை நேற்று திங்கட்கிழமை மீட்டுள்ளது.

கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பால் தேடுதல் நடவடிக்கைகளில் சிரமங்கள் எதிர்நோக்கபபடுவதாக அவசரகால மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE