Thursday 2nd of May 2024 05:33:51 PM GMT

LANGUAGE - TAMIL
நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக செயல்பட்ட  மாணவர்களுக்கு சின்னம்  சூட்டி சான்றிதழ் வழங்கி வைப்பு!

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக செயல்பட்ட மாணவர்களுக்கு சின்னம் சூட்டி சான்றிதழ் வழங்கி வைப்பு!


மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாகவும், தலைமைத்துவ பயிற்சியை வழங்கும் நோக்குடன் 'ஒன்று கூடுவோம் இலங்கை' அமைப்பினூடாக ஏற்பாடு செய்யப்பட்ட நல்லிணக்க செயலமர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் , தொண்டர் அடிப்படையில் ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பினூடாக நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும் இளைஞர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் இன்று செவ்வாய்க்கிழமை (18) காலை மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் இடம் பெற்றது.

ஒன்றுகூடுவோம் இலங்கை அமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஜோசப் நயன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் மாணவர் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு தற்போது தொண்டர்களாக செயற்பட்டு வரும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் சின்னம் சூட்டி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் மன்-அல் அஸ்ஹர் பாடசாலையின் அதிபர் என்.வை.மாஹீர் , ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பினுடைய பிராந்திய இணைப்பாளர் அனிலவன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

IMAGE_ALT

IMAGE_ALT

IMAGE_ALT

IMAGE_ALT


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE