பெண்களுக்கான உலகக் கிண்ண ரீ-20 தொடருக்கான முன்னாயத்த பயிற்சிப் போட்டியொன்றில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பதிவு செய்துள்ளது இலங்கை பெண்கள் அணி.
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து பெண்கள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களை பெற்றிருந்தது. அந்த அணியின் சார்பில் 5 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்திருந்தனர்.
இலங்கை பெண்கள் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சிறீவர்த்தனே 4 விக்கெட்டுக்களையும், ஜெயங்கனி 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி இங்கிலாந்து பெண்கள் அணிக்கு நெருக்கடி கொடுத்திருந்தனர்.
123 என்ற வெற்றி இலக்குடன் ஆடிய இலங்கை பெண்கள் அணி 12 ஓவர்களை மட்டும் எதிர்கொண்டு விக்கெட் இழப்பில்லாமல் அபார வெற்றி பெற்றுள்ளது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஜெயங்கனி பெரோ ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி வெற்றி இலக்கை அடைந்திருந்தனர்.
இலங்கை பெண்கள் அணியின் தலைவி ஜெயங்கனி 50 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு ஐந்து 6 ஓட்டங்கள் எட்டு 4 ஓட்டங்களை விளாசி 78 ஓட்டங்களையும் பெரேரா 29 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்ரேலியாவில் நடைபெறவிருக்கும் பெண்கள் உலகக் கிண்ண ரீ-20 தொடரின் முதலாவது போட்டி வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. சிட்னியில் நடைபெறும் இப்போட்டியில் அவுஸ்ரேலிய-இந்திய பெண்கள் அணிகள் விளையாடுகின்றன.
Category: விளையாட்டு, பகுப்பு
Tags: