முல்லைத்தீவு மாவட்டம் நாயாறு பகுதியில் வேகமாகக் சென்ற கடற்படையினரின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நாயாறு களப்ப நீரேரிக்குள் பாய்ந்துள்ளது.
இந்தச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
இருப்பினும் வானத்தில் பயணித்த கடற்படையினருக்கு பெரிய அளவிலான பாதிப்பு இல்லை என்று தெரியவருகிறது.
இதனிடையே செய்தியாளர்கள் தவிர்ந்த சாதாரணமக்கள் ஒளிப்படங்களை பதிவு செய்வதற்கு அங்கு நின்றிருந்த கடற்படையினர் தடை விதித்திருக்கின்றனர். அதிகாரி ஒருவர் பயணித்த வாகனம் என்பதால் படம் எடுக்கவேண்டாம் என்று அவர்கள் தெரிவித்ததாக தெரியவருகிறது.
உடனடியாகவே உழவியந்திரம் வரவழைக்கப்பட்டு கடற்படையினர் வாகனத்தை அப்புறப்படுத்திக் கொண்டு சென்றுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.