ஜப்பான் சொகுசுக்கப்பலான டையமன்ட் பிரின்சஸ் கப்பலில் பயணித்த இந்தியர்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
3,700 பேருக்கும் அதிகமான சுற்றுலா பயணிகளுடன் உல்லாசப் பயணத்தில் ஈடுபட்டிருந்த டையமன்ட் பிரின்சஸ் கப்பலில் 138 இந்தியர்களும் ஈடுபட்டிருந்தனர். அக்கப்பலில் இருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து ஜப்பான் துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு கட்டம் கட்டமாக பயணிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அக்கப்பலில் பயணித்த 138 இந்தியர்களில் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது முதலில் உறுதிசெய்யப்பட்டிருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 8வது இந்தியருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து கொரோனா பாதித்த இந்தியர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.
இக்கப்பலில் பயணித்தவர்களில் சுமார் 600 பேருக்கு அதிகமானவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.