ஹன்ற் ஞாபகாரத்த ஓவியக் கூடத்தின் ஓவியக் கண்காட்சியும் கலாநிதி தர்மா அவர்களினால் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட பறவைகளின் புகைப்படக் கண்காட்சியும் பரிசளிப்பு நிகழ்வும் சாவகச்சேரியில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி தேவாலய வீதியில் அமைந்துள்ள ரி.பி.ஹன்ற் ஞாபகார்த்த ஓவியக் கூடத்தில் மேற்படி ஓவியக் கூடத்தின் பணிப்பாளர் திருமதி யோகமணி அழகரட்ணம் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் டாக்டர்களான நிகால் குணரட்ன, சரோஜினி குணரட்ண, ஜெயவிக்கிரமராசா. காருண்ணியன் அருளானந்தம் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர். இதன் போது விருந்தினர்கள் மலர் மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இதனைத் தொடர்ந்து கண்காட்சிக் கூடம் திறந்து வைக்கப்பட்டு விருந்தினர்கள் பொது மக்கள் மாணவர்கள் எனப் பலரும் கண்காட்சிக் கூடத்தைப் பார்வையிட்டனர்.
இதன் பின்னர் பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.