இறுதிப்போரில் உயிரிழந்த ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையில் எழு கலை இலக்கியப் பேரவையைச் சேர்ந்த ந.மயூரரூபன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் ஊடகவியலாளர்கள் இராதேயன், பி.மாணிக்காவசகம் ஆகியோர் உருவப்படத்திற்கு சுடரேற்றி மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து கருத்துரைகளை எழுகலை இலக்கியப் பேரவையைச் சேர்ந்த நிஷாகரன், எழுத்தாளர் உடுவில் அரவிந்தன், ஊடகவியலாளர் தயாபரன், யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை விரிவுரையாளர் சி.ரகுராம், எழு கலை இலக்கியப் பேரவையைச் சேர்ந்த கை.சரவணன ஆகியோர் நிகழ்த்தினர்.