Friday 26th of April 2024 12:42:38 PM GMT

LANGUAGE - TAMIL
நெடுந்தீவு பிரதேசசபை ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி வசமானது!

நெடுந்தீவு பிரதேசசபை ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி வசமானது!


நெடுந்தீவு பிரதேசசபைக்கான தவிசாளர் மற்றும் உபதவிசாளர் தெரிவு இன்று பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு.பற்றிக்டிறஞ்சன்அவர்களது தலைமையில்இடம்பெற்றது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் ஈழவிடுதலை இயக்கத்தினது அங்கத்தவர்கள் எவரும் தெரிவுக் கூட்டத்திற்குச் சமூகமளிக்கவில்லை.

ஈழமக்கள் ஜனநாயக்கட்சியினது 06 உறுப்பினர்களும், ஐக்கியதேசியக்கட்சியின்ஒருஉறுப்பினர், சுயேட்சை குழுவின் இரண்டு உறுப்பினர் உட்பட09 உறுப்பினர்கள் கூட்டத்தில் பிரசன்னமாகி இருந்தனர்.

தற்போது தலைவராக ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி பிரதிநிதி நல்லதம்பி சசிகுமார் அவர்களும் உபதவிசாளராக சந்தியாப்பிள்ளை தோமஸ் செல்வராஜ் அவர்களும் தேர்வுசெய்யப்பட்டார்கள்.

கடந்த இரண்டு வருடங்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அதிகாரம் பெற்று எந்தவித முன்னேற்றங்களையும் மேற்கொள்ளவில்லை என மக்கள் விசனம் தெரிவித்து வந்த வேளையில் தற்போது ஈழமக்கள் ஜனநாயக்கட்சியின் வசம் பிரதேசசபை சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE