பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
சட்டத்தரணியின் ஊடாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இது தொடர்பில் அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
22 தேர்தல் மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்தின் கீழ் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.