பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த 89 போ் நேற்று புதன்கிழமை உயிரிழந்தனா்.
புதிய இறப்புக்களுடன் பிரான்ஸில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 264 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் பிரான்ஸில் நேற்று ஒரே நாளில் 1,404 போ் புதிதாக தொற்றுக்குள்ளாகி உறுதிசெய்யப்பட்டனா்.
புதிய தொற்று நோயாளா்களுடன் அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணி்க்கை 9,134-ஆக அதிகரித்துள்ளது. இது சுமார் - 18% அதிகரிப்பாகும். செவ்வாய்க்கிழமை இந்த எண்ணிக்கை 7,730- ஆக இருந்தது.
இதேவேளை, பிரான்ஸில் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ள 931 போ் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாகவும் அவா்கள் செயற்கைச் சுவாசத்தின் உதவியுடனேயே சிகிச்சையில் உள்ளதாகவும் பிரான்ஸ் சுகாதார முகாமைத்துவ நிலைய பணிப்பாளா் ஜெரோம் சொலமன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரான்ஸ் முற்றாக முடக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளில் நாடு முழுவதும் சுமார் ஒரு இலட்சம் பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனா்.
வேலைக்குச் செல்வது, தேவைகளுக்கு பொருட்களை வாங்குவது அல்லது மருத்துவ சிகிச்சை பெறுதல்.போன்ற அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகின்றனா்.
இதேவேளை, கொரோனாவால் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுவரும் பிரானஸூக்கு உதவும் வகையில் மருந்துப் பொருட்களை சீனா நேற்று வழங்கியது.
சில வாரங்களுக்கு முன்னா் சீனாவுக்கு பிரான்ஸ் மருத்துவ உதவிப் பொருட்களை அனுப்பி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.