கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஐரோப்பாவில் நேற்று 5 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றுநோயின் புதிய மையமாகவுள்ள இத்தாலி மற்றும் ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று தொடத்து அதிகரித்து வரும் நிலையில் அங்கு உயிர்ப் பலிகளும் உயா்ந்து வருகின்றன.
கொரோனா வைரஸால் இதுவரை ஸ்பெயினில் குறைந்தது 1,000 பேர் இறந்துள்ளனர். அதே நேரத்தில் நாட்டில் மொத்த தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 20,000 ஐ எட்டியுள்ளது.
இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தது முதல் இன்றுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 4000 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது இதுவரை சீனாவில் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த இறப்புகளின் எண்ணிக்கையை விட அதிகமானதாகும்.