உலகெங்கும் கொரோனா பாதிப்பு கட்டுபாடின்றி அதிகரித்து வரும் நிலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவிருக்கும் 2020 ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து வெளியேறுவதாக கனடா ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.
உலகளாவில் 13 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களை பலியெடுத்து பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில் ஒலிம்பிக் தொடரை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்குமாறு சர்வதேச ஒலிம்பிக், பரா ஒலிம்பிக் கமிட்டிகளிடமும் சர்வதேச சுகாதார நிறுவனத்திடமும், கனடா ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீரர்களின் நலன் அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவை எடுத்துள்தாக கனடா ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் குழு நேற்று ஞாயிற்றுக் கிழமை கூடி ஆலோசனைக்கு பின்னர் தெரிவித்துள்ளது.
Category: விளையாட்டு, பகுப்பு
Tags: கனடா