தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் முதல் கொரோனா தொற்றாளர் உறுதி செய்யப்பட்டுள்ளார். அண்மையில் டுபாயில் இருந்து திரும்பியிருந்த 21 வயது இளைஞருக்கே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா அறிகுறியுடன் திருச்சி அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 21 வயது இளைஞரது பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவருக்கு கொரோனா நேர்மறை என சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் முதலாவது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.