Friday 26th of April 2024 11:11:20 AM GMT

LANGUAGE - TAMIL
கொலை
ஒன்று மற்றும் 3 வயதான குழந்தைகள்  கிழக்கு லண்டனில் குத்திக் கொலை!

ஒன்று மற்றும் 3 வயதான குழந்தைகள் கிழக்கு லண்டனில் குத்திக் கொலை!


கிழக்கு லண்டனில் உள்ள வீடொன்றில் ஒரு வயதுப் பெண் குழந்தை மற்றும் 3 வயதுச் சிறுவன் ஆகியோர் நேற்று கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனா். 40 வயதான ஒருவரும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனா்.

லண்டன் நேரப்படி நேற்று மாலை 5:30 மணியளவில் ஐல்போர்ட் - ஆல்ட்பரோ சாலை வடக்கில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு குழுந்தைகளும் பெரியவா் ஒருவரும் காயங்களுடன் காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்துக்குப் பொலிஸார் சென்றபோது அங்கு சிறுமி இறந்துகிடந்தார். மூன்று வயது சிறுவன் ஆபத்தான காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.

படுகயமடைந்த 40 வயதான நபா் தொடா்ந்தும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வடக்கு லண்டன் நகர பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்தக் கொலைகளுடன் தொடா்புடைய யாரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை .விசேட குற்றப் புலனாய்வு பொலிஸ் குழுக்கள் இந்தக் கத்திக்குத்து, கொலைகள் தொடா்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா் எனவும் அவா்கள் கூறியுள்ளனா்.


Category: உலகம், புதிது
Tags: இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE