ரீ-20 கிரிக்கெட்டின் அதி சிறந்த வீரருக்கான தேர்வில் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவை சொற்ப வித்தியாசத்தில் பின் தள்ளி, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் தெரிவாகியுள்ளார்.
அதேநேரம் பிரசித்தி பெற்ற வீரராக இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கிரிக் இன்போ இணையத்தள உத்தியோகத்தர்களுக்கிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இலங்கையின் லசித் மலிங்கவை சொற்ப வித்தியாசத்தில் முந்தி கிறிஸ் கெய்ல் முதலிடத்தை பெற்று ரீ-20 கிரிக்கெட்டின் அதி சிறந்த வீரராக தேர்வாகியுள்ளார்.
வாசகர்கள் மத்தியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரசித்தி பெற்ற வீரராக இந்தியாவின் ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா